districts

img

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

திருச்சிராப்பள்ளி, டிச,7- தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சார்பில் மின் ஆற்றல், மின் சிக்கனம், மின் பாதுகாப்பு ஆகிய தலைப்பு களில் திருச்சி மாவட்டத்திலுள்ள 30 அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.  இதில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியில்  நடைபெற்றது. திருச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.பிரகாசம் தலைமை வகித்து பேசினார்.  பள்ளிக்கல்வித்துறை சார்பில் மகேஸ்வரன், திருச்சி செயற்பொறியாளர் (பொது) ஆர்.கற்பகசெல்வி, திருச்சி நகர செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர்/பொது/ சி.பாஸ்கர், கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மொ.அசோக், செயலாளர் மு.மணி கண்டன், துணைத் தலைவர் சிவ.வெங்கடேஷ் ஆகி யோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீத்தா வரவேற்றார்.  முடிவில் ஆற்றல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரபா நன்றி கூறினார்.