கரூர், மே 19-
நிலம், நீர் பொது பயன்பாட்டை தடுத்து சிறப்பு சட்டம் என்ற பெயரில் நீர் நிலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நில ஒருங்கி ணைப்பு சட்டம் 2023-ஐ திரும்பப் பெற வேண்டும், இயற்கைக்கு எதிரான செறியூட்டப் பட்ட அரிசி திட்டத்தை கைவிட வேண்டும் என்பதன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூர் வட்டக் குழு சார்பில் தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கடவூர் வட்டச் செய லாளர் ரவிகண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராம மூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் வி.கே.தங்கவேல், மாவட்டப் பொருளா ளர் கே.சுப்பிரமணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.வேல்முரு கன், சிபிஐ மாவட்டச் செயலாளர் நாட்ராயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.