பாபநாசம், பிப்.25 - தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலைக்கு வரைமுறை நிர்ணயிக்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பி னருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சிறு தனியார் பால் நிறுவனங்கள் சில நாட்க ளுக்கு முன்பு தங்களது விற்பனை விலையை உயர்த்தின. தற்போது திருமலா, ஹெரிடேஜ், ஜெர்சி, டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 லிருந்து ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நிலவி வந்த சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உற்பத்தியா ளர்களிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, விற்பனை விலையை குறைக்கா மல் விற்று வந்ததாக தெரிகிறது. தற்போது கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொருந்தாத கார ணத்தைக் கூறி பால் விற்பனை விலையை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் தினசரி பால் தேவையில் 16 சதவீதத்தை மட்டுமே அரசின் நிறுவனமான ஆவின் பால் பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 84 சதவீத தேவையை தனியார் பால் நிறுவ னங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. இந்நிலை யில் தனியார் நிறுவனங்களின் விற்பனை விலை உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களின் நிதிச் சுமையை அதிகரிக்கச் செய்யும். எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலைக்கு வரை முறை நிர்ணயித்து பால் உற்பத்தியாளர் களையும் நுகர்வோர்களையும் பாதுகாக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரி வித்துள்ளார்.