கரூர், ஆக.31- தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். பி.எட் மாண வர்களை கொண்டு ஆசிரி யர்களை மதிப்பீடு செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். தொடக்க நிலை யில் ஆன்-லைன் தேர்வு முறைகளை கைவிட வேண்டும். இஎம்ஐஎஸ்-யில் ஆசிரியர்களை தேவையற்ற பதிவுகளை ஏற்ற நிர்ப்பந்திப் பதை கைவிட வேண்டும். காலை உணவுத் திட்டத்தை நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு களுக்கும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக் கும் விரிவுபடுத்த வேண்டும். காலை உணவு திட்ட பணி யிலிருந்து ஆசிரியர்களை விடுவிப்பதுடன், அனைத்து காலை உணவு திட்ட பணி களையும் சத்துணவு ஊழி யர்களிடம் வழங்கிட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வீ.மோ கன் தலைமை வகித்தார். கரூர் நகரச் செயலாளர் கோ. செல்வம் வரவேற்று பேசி னார். மாவட்டச் செயலாளர் ஜ.ஜெயராஜ் சிறப்புரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி நன்றி கூறினார். மாவட்ட துணை செயலாளர்கள், தலைவர்கள், ஒன்றிய செய லாளர்கள் கலந்து கொண்ட னர்.