ஒட்டன்சத்திரம், ஜன.3- ஒட்டன்சத்திரத்தில் வாரச் சந்தையில் கட்டு சேவல் களை வாங்க குவிந்த வட மாநில வியாபாரிகள் களத் தில் விளையாட விட்டு விலை நிர்ணயம் செய்து வாங்கிச் செல்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை சேலல் மற்றும் கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இதன்படி, ஒட்டன்சத் திரம், கள்ளிமந்தையம், இடையக்கோட்டை, மார்க் கம்பட்டி, வடகாடு மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிரா மப்பகுதிகளில் வளர்க்கப் படும், சேவல், கோழிகளை இச்சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற் பனை செய்கின்றனர். இச்சந்தையில் கட்டுச் சேவல்கள் அதிகமாக விற் பனை செய்யப்படுவது வழக்கமாகும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சம யத்தில் கிராமங்களில் சேவல் கட்டு போட்டி நடைபெறும். இதற்காக உயர் ரக சேவல் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் வியாபாரிகள் அதிக ளவு வராததால் ஒரு வய துள்ள சேவல்கள் ரூ.3 ஆயி ரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையாகிறது. இதே சேவல் கடந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் வரை விற்ப னையானது. இச்சந்தைக்கு ஆந்திரா மற்றும் பீகார், சண்டிகர், உத் தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட வட மாநி லங்களில் சேவல் சண்டை நடைபெற்று வருவதால், அங்கிருந்து வரும் அதிக ளவு வியாபாரிகள் ஒட்டன் சத்திரம் சந்தைக்கு வந்து, சேவல்களுக்கு உணவு கொடுத்து அதனை களத்தில் நின்று சண்டை விட வைத்து வாங்கிச் சென்றனர். சேவல் களின் விலை வீழ்ச்சியால் தமிழகத்தில் சேவல் வளர்க்கும் விவசாயிகள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள னர்.