districts

img

வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரகாஷ் காரத் பிரச்சாரம்

மதுரை, ஏப்.8- இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து ஏப்ரல் 6 அன்று கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்  பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரையில் டி.எம்.கோர்ட் மற்றும் யா.ஒத்தக்கடை,நரசிங்கம் சாலையில் ஏப்ரல் 6 சனிக்கிழமை யன்று மாலையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   மதுரை டி. எம். கோர்ட் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிபிஎம் மத்திய பகுதிகுழு - 2 செயலாளர் பி.ஜீவா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின் வர வேற்று பேசினார், திமுக உயர்  நிலை செயல்திட்டக்குழு பொன்.  முத்துராமலிங்கம், தணிக்கைக் குழு உறுப்பினர் -முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வ.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் -சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பா.ரவிக்குமார், சிபிஐ மத்திய தொகுதி பொறுப்பாளர் நந்தாசிங், காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.கார்த்திகேயன், மதிமுக மாவட்ட செயலாளர் எஸ். முனியசாமி ஆகியோர் பேசி னர்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எம்.பாலசுப்பிரமணி யம் நிகழ்ச்சிளை ஒருங்கிணைத் தார்.  மாவட்டக்குழு உறுப்பினர் பி. கோபிநாத் நன்றி கூறினார், கூட்  டத்தில் திமுக மத்திய தொகுதி  பார்வையாளர் டாக்டர் சுந்தர் ராஜன், திமுக செயல் திட்டக்குழு உறுப்பினர் குழந்தைவேலு,   மக்  கள் நீதி மய்யம் மதுரை மண்டல செயலாளர் எம். அழகர்,  மேயர் இந்திராணி பொன் வசந்த், சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், துணை  மேயர் தி. நாகராஜன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.  ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிபிஎம் தாலு காச் செயலாளர் மு.கலைச்செல் வன் தலைமை தாங்கினார். திமுக  கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.பி. ரகுபதி முன்னிலை வகித்தார்.  ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஏ.பி.வி.பாலாண்டி,எஸ்.பி.சரவ ணன், திருமோகூர் ஊராட்சித் தலை வர் அண்ணாமலை, மாவட்டக் கவுன்சிலர் வடிவேல்முருகன், சிபிஐ பி.பூமிநாதன், வி.சி.க. ஒன்றி யச் செயலாளர் ஆறுமுகம், ஈழ வளவன், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் கதி ரேசன்,காங்கிரஸ் ஜெயராஜ் பாண்டியன், மதிமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.நீலமேகம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் பிலால் ராஜா,தமிழ்ப்புலிகள் அமைப்பின் விஜயகுமார் மற்றும் முஸ்தபா, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர்கள் உ.வாசுகி, பி.சம்பத், மாநி லச்செயற்குழு உறுப்பினர்கள் ஜி,சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஏ.லாசர், எஸ்.கே.பொன் னுத்தாய், எஸ்.பாலா,எஸ்.நம்பு ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், எஸ்.பி.இளங்கோவன், அரவிந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.