அரியலூர், டிச.29 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரா மத்தில் சுமார் 50 மண்பாண்ட தொழி லாளர் குடும்பங்கள் வசித்து வரு கின்றன. அவர்களுக்கு மண்பாண் டம் செய்வதைத் தவிர வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. தமிழ கம் முழுவதும் கடந்த 25 ஆண்டு களில் கணிசமாக மண்பாண்ட தொழி லாளர்கள் தங்கள் தொழிலை விட்டு விட்டு பல்வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது மிகவும் குறைந்த அள விலேயே மண்பாண்ட தொழிலா ளர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு காலங்களில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட முடியாமல், இரண்டு ஆண்டுகளாக சிரமம் அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா இருந்த போதிலும் அவர்களுக்கு மண்பாண்டம் செய்வதற்கு மூலப் பொருளான களிமண் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது.
அதனால் மண்பாண்ட உற்பத்தியில் அவர்களுக்கு கடந்த காலங்களில் சிரமம் ஏற்படவில்லை. ஆனால் விற்பனை செய்வதில் இடர்பாடு களை சந்தித்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதங் களில் பெய்த கனமழை காரணமாக மண் பண்டங்கள் செய்தும் அவற்றை சூளையில் இட்டு சுட முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்கையும் அவர்க ளுக்கு ஒத்துழைக்கும் விதத்தில் உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அதிக அளவில் மண் பாண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியும் என்று நம்பினர். அண்ணங்காரம்பேட்டை கிரா மத்தில் தனியார் நிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்குத் தேவையான களிமண்ணை அரசு அனுமதியோடு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அவர்க ளுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே கடந்த ஆண்டு அனுமதி பெற்று எடுத்த மண்ணில் மீதம் இருந்த சொற்ப அளவு மண்ணை கொண்டு, குறைந்த அளவில் மண் பாண்டங்களை உற்பத்தி செய்துள்ள னர். மண் எடுக்க அனுமதி பெறுவ தற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, மண்பாண்ட தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவ ணங்களை அதிகாரிகளிடம் வழங்கி யும், 6 மாதமாக அதிகாரிகளிடம் அனு மதி கேட்டு அலைந்தும் மண் எடுக்க அனுமதி கிடைக்காததால் மண்பாண்ட தொழிலாளர்கள் மனமு டைந்து உள்ளனர். கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து படிப்படியாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், இந்த ஆண்டு மண் எடுக்க அரசு அதிகாரிகள் மெத்த னம் காட்டியதால் பொருளாதார ரீதி யாக மண்பாண்ட தொழிலாளர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். அவர்களது அடிப்படைத் தேவை யான 3 வேளை உணவுக்கே அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரி வித்தனர். மேலும் எந்த சூழ்நிலையிலும் உழைக்க தயாராக உள்ளதாகவும், தலைமுறை தலைமுறையாக செய்து வரும் மண்பாண்ட தொழிலை கை விட தயாராக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். உலோக பாத்திர பயன்பாடுகளுக்கு மத்தி யில் மண்பாண்டத்தில் பயன்படுத் துவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டது. கார்த்திகை தீபத் திருநாளுக்கு அகல் விளக்கு தயாரிப்பது, பொங்கல் பண்டி கைக்கு சட்டி மற்றும் பானைகள் தயா ரிப்பதும் அவர்களது 6 மாத பொருளா தார தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்யும். எனவே ஒவ்வொரு ஆண்டும் தடையில்லாமல் மண்பாண்ட தொழி லுக்குத் தேவையான மண் எடுப்ப தற்கு அரசு தடையில்லாமல் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் வழங்கும்போது, பொங்கல் தொகுப் போடு அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு ஆகியவற்றையும் சேர்த்து வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்படி ஆணை பிறப்பிக்கப்படும் போது தமிழகம் முழுவதும் அதிக அளவு மண் பாண்டங்கள் தேவைப்ப டும். அதிகாரிகள் மண்பாண்ட தொழி லாளர்களுக்கு தேவையான வசதி களை தொய்வு இல்லாமல் செய்து கொடுப்பார்கள். மழைக்காலங்களில் தொழிலா ளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். மண்பாண்டங்களை அரசு விலைக்கு வாங்கி கூட்டுறவு பண்டக சாலைகள் மூலமாக விற்பனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.