districts

img

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.17, 18 தேதிகளில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.17, 18 தேதிகளில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கிடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் பொதுவான சிறப்பு மையம் அமைக்கப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் உரிய காவல்துறை பாதுகாப்புடன், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிடும் பணிகள் செவ்வாயன்று நடைபெற்றன.