districts

தியாகராய நகரில் தரமற்ற அசைவ உணவு

சென்னை, ஆக. 1 -

    சென்னை  தியாகராய நகரில் ஒரு அசைவ உணவகத்திற்கு திங்களன்று ஐ.டி. ஊழியர்கள் 15 பேர் மதிய உணவு சாப்பிட சென்றனர். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இந்த உணவு சரியில்லை என்று ஓட்டல் ஊழியர்க ளுடன் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், உணவு தரமானதாக தான் இருக்கிறது என்று ஊழியர்கள் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், பெண் ஊழியர்கள் சிலர் உணவு கெட்டு போனது போல் தெரிகிறது. வாந்தி வருவது போல் உள்ளது என்று கூறியுள்ளனர். இதனால், வாக்கு வாதம் ஏற்பட்டது.

   இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பினர்.  

    பிறகு, ஓட்டல் உரிமையாளரை வர வழைத்தனர். சமைத்து வைத்திருந்த உணவு களை அவரது முன்னிலையில் ஆய்வு செய்த னர். அப்போது குழம்புக்குள் பாலிதீன் கவர் கிடந்தது. குளிர்பதன பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இறைச்சியும் கெட்டுப்போனது. கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தது.  

   பிறகு, கெட்டுப்போன உணவுகளை எடுத்து சென்று அழித்தனர். மேலும் தற்காலிக மாக அந்த ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். தரமற்ற உணவுகள் பற்றி விளக்கம் அளிக்கும் படி ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீசும் கொடுக்கப்பட்டது.