districts

கும்பகோணம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு

கும்பகோணம், ஜன.9 - தரமற்ற உணவு வழங்குவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு  கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதியில், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த 20 மாண வர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இவர் களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. விடுதியில் தங்கி  படிக்கும் மாணவர்களுக்கு தரமான உணவும்  வழங்குவது இல்லை.  இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. மேலும் விடுதியில் உள்ள மாணவர்களை மிரட்டியும், தகாத வார்த்தைகளால் பேசியும் வரும் விடுதிக் காப்பாளர் ராஜேந்திரன் மீது  துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டு மெனக் கோரி கும்பகோணம் தனி வட்டாட்சி யர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவ லகத்தில், இந்திய மாணவர் சங்க விடுதி  கிளை சார்பில் மாவட்டத் துணைச் செயலா ளர் சு.பிரதீப் தலைமையில் மனு கொடுக்கப் பட்டது. தொடர்ந்து கும்பகோணம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்  நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட ஆதிதிரா விடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், “விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். விடுதி காப்பாளர் ராஜேந்திரனிடம் விசா ரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.  இதனால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.