districts

போக்குவரத்து பணிமனையில் தரமற்ற உணவு தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு

கும்பகோணம், ஆக.21 -

       கும்பகோணம் அரசு  விரைவு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் களுக்கு வழங்கும் உணவு தர மற்றதாக உள்ளதால் தொழி லாளர்களுக்கு வயிறு கோளாறு ஏற்பட்டுள்ளது.  

      புதிய உணவு ஒப்பந் தத்தை ரத்து செய்து, உணவுத் துறையை நிர்வா கமே எடுத்து நடத்த  வேண்டும் எனக் கோரி  போக்குவரத்து அனைத்து  சங்கதொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

      தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை  கும்பகோணம் அருகே அசூர்  கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும்  மேற்பட்டோர் பணிமனை தொழில்நுட்ப தொழிலா ளர்களாகவும், நடத்து நர்-ஓட்டுநர்களாக பணி புரிந்து வருகின்றனர். அவர் களுக்கு டீ மற்றும் உணவு  வகைகள் பணிமனையி லேயே ஏற்பாடு செய்யப் பட்டு குறைந்த விலையில் விற்கப்பட்டது.

புதிய டெண்டர்

     இந்நிலையில் பணி மனை தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்கு நிர்வாகம் புதிய டெண்டர் அறிவித்துள்ளது. இதில் டெண்டர் எடுத்தவர் தரமற்ற உணவுகளை கொடுத்து  வருகிறார். தொழிலாளர் களும் வேறு வழியின்றி இதைச் சாப்பிடுவதால் தொழிலாளர்களுக்கு வயிறு  சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் உடல்நலக் குறை வால் போக்குவரத்து தொழி லாளர்கள் அவதிப்படு கின்றனர்.

     எனவே கும்பகோணம் அரசு விரைவு போக்கு வரத்து கழக பணிமனையின் புதிய உணவு டெண்டரை ரத்து செய்து, நிர்வாகத்தின் மேற்பார்வையில் டெண் டர் எடுத்து தரமான உணவு களை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இதனை  வலியுறுத்தி அரசு விரைவு  போக்குவரத்துக் கழக  அனைத்து தொழிலாளர் களும் சங்க பேதமின்றி பணி மனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.