districts

img

மாணவர்களுக்கு சொந்த செலவில் பேனா வழங்கிய பூம்புகார் எம்எல்ஏ

மயிலாடுதுறை, பிப்.28 - மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி  மாணவர்களுக்கு பேனாக்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் மார்ச் மாதத்தில்  12,11,10 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.  இந்நிலையில் பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன்  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 63 பள்ளி களைச் சேர்ந்த மொத்தம் 10368 மாணவ-மாணவிகளுக்கு ரூ.80 மதிப்புக் கொண்ட பேனாவை, தனது சொந்த செலவில் வழங்க  எண்ணினார். அதன்படி, புதனன்று பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரங்கம் பாடி தூய தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பேனா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்தினார். நிகழ்ச்சியில் நிவேதா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி தாளாளர் லெட்சுமி நிவேதா  முருகன், தலைமை ஆசிரியர் சுகுணாசங்கரி, திமுக ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக்,  பேரூராட்சி மன்ற துணை தலைவர் பொன்  ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.