திருச்சிராப்பள்ளி, ஆக.1 -
பொன்மலை ரயில்வே மருத்துவமனை நிர்வா கத்தை கண்டித்து தட்சிண ரயில்வே பென்சனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
எப்.ஏ.எம் ரூ.1000 வாங்கு வதை காரணம் காட்டி, நீண்ட நாள் நோய்களால் ஏற்படும் இணை நோய் களுக்கு மருந்தும், மருத்து வமும் மறுக்கும் திருச்சி பொன் மலை ரயில்வே மருத்துவ மனையின் செயலுக்கு கண்ட னம் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே மருத்துவமனை யில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண் டும். எக்கோ, டி.எம்.டி ஸ்கேன் போன்ற மருத்துவ கருவிகள் அமைக்க வேண்டும்.
ஹோமியோபதி மருத்து வத்தை தொடங்க வேண்டும். வெளியில் செய்யப்படும் ரத்த பரிசோதனைக்கான செலவை மருத்துவமனை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தட் சிண ரயில்வே பென்சனர் சங்கம் சார்பில் செவ்வா யன்று திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தட்சிண ரயில்வே பென்சனர் சங்க கோட்ட பொருளாளர் தணிகாசலம் தலைமை வகித்தார். மத்திய சங்க நிர் வாகி மகேந்திரன், கோட்டச் செயலாளர் மனோகரன், கோட்டத் தலைவர் வெங்க டேசன் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசி னர்.