மயிலாடுதுறை, ஜன.16 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூரை அடுத்துள்ள டி.மணல்மேட் டில் இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் 24 ஆவது பொங்கல் விளையாட்டு விழா மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை கிளைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் குணாளன், துணை செயலாளர் சத்தியமூர்த்தி, துணைத்தலைவர் செல்லமணி, கிராம நாட்டாமை பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஐயப்பன் கொடி யேற்றினார். விளையாட்டு போட்டிகளை ஒன்றிய தலைவர் பவுல் சத்தியராஜ் துவக்கி வைத்தார். போட்டிகளுக்கு பிறகு மாலை நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை மாற்று ஊடக மையத்தின் இயக்குந ரும் பேராசிரியருமான இரா.காளீஸ்வ ரன் துவக்கி வைத்தார். முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர் காளீஸ்வ ரன் குழுவினர் நடத்திய கலைநிகழ்ச்சி கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி மகிழ்வுற செய்தது. பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், வாலிபர் சங்க மாநில தலைவர் என். ரெஜிஸ்குமார், பேரா.காளீஸ்வரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவா சன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், முன்னாள் மாநில துணைத்தலைவர் ஏ.ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், டி.சிம்சன், விவசாய சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், மாவட்டத்துணை தலைவர் குணசுந்தரி, ஒன்றியச் செயலாளர் ஐயப்பன், செம்பை சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட் ரோ, ப.மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் வட்டத்தலைவர் ஜி.பி சிவா, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ உள்ளிட் டோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினர். இந்திய விவசாயத்தை பாதுகாப் போம், விவசாயிகளின் வெற்றியைக் கொண்டாடுவோம். பெண்கள், குழந்தை களை பாதுகாப்போம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னர். நிறைவாக கிளைச் செயலாளர் பால கிருஷ்ணன் நன்றி கூறினார்.