பொன்னமராவதி அருகேயுள்ள வாராப்பூர் ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஐ.மலர்விழி நாகராஜன் மற்றும் இளைஞர்கள் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.