புதுக்கோட்டை, ஏப்.5 - திருச்சிராப்பள்ளி தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் தேர்தல் அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர்களுமான மா.பிரதீப் குமார், ஐ.சா.மெர்சி ரம்யா ஆகி யோர் புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,560 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி யில் 266 வாக்குச்சாவடி மையங்களும், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் 239 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,45, 361 வாக்காளர்கள் உள்ளனர். இதில் திருச்சி ராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 2,45,849 வாக்காளர்களும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 2,02,863 வாக்கா ளர்களும் உள்ளனர். முன்னதாக, கந்தர்வகோட்டை வட்டாட்சி யர் அலுவலகத்தில், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, கந்தர்வ கோட்டை சட்டமன்றத் தொகுதியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாது காப்பு வைப்பறை மற்றும் பல்வேறு தேர்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த னர். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் பா.ஐஸ்வர்யா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் க.ஸ்ரீதர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர்கள் பரணி (புதுக்கோட்டை) விஜயலெட்சுமி (கந்தர்வகோட்டை) உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.