புதுக்கோட்டை, ஜன.28 - கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் எழுதிய ‘கனவின் இசைக் குறிப்பு’ கவிதை நூல் அறிமுக விழா புதுக்கோட்டையில் சனிக் கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்து நிலவன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை தமிழ் சங்கத் தலைவர் தங்கம்மூர்த்தி தொடக்கவுரையாற்றினார். நூல் குறித்து வட்டாரக் கல்வி அலுவ லர் இரா.ஜெயலெட்சுமி, மருத்து வர் தெட்சிணாமூர்த்தி, சூர்யா சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக பா.ஸ்ரீமலை யப்பன் வரவேற்க, மு.கீதா நன்றி கூறினார். நூலாசிரியர் மைதிலி கஸ்தூரிரங்கன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சிகளை த. ரேவதி தொகுத்து வழங்கினார்.