திருவாரூர், நவ.5 - திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட தண்டலை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) 2022-2023 ஆம் ஆண்டு தொகுதி-2 திட்டத்தின்கீழ் ரூ.9,34,855 மதிப்பிலான பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரம், நெகிழி தூசு இயந்திரம் மற்றும் எடை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீகமலாம்பிகை மகளிர் சுய உதவிக்குழு பிளாஸ்டிக் தூளாக்கும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் திறந்து வைத்தனர். திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர். நெகிழி தூளாக்கும் இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 150 கிலோ வரையிலான நெகிழியினை தூளாக்கும் பணி மேற்கொள்ள முடியும்.