நாகப்பட்டினம், அக்.3 - நாகப்பட்டினம் மாவட்டம், பி.ஆர்.புரம் ஊராட்சியில் 1.5 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி தொடங்கி வைத்தார். கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட கீழையூர் ஒன்றியம், பி.ஆர்.புரம் ஊராட்சி யில் 1.5 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. மாவட்டத்தின் கடற்கரை ஓரங்களில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இப்பணியை கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பேபி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.