புதுக்கோட்டை, நவ.27 - புதுக்கோட்டையை அடுத்த முள்ளூர் ஊராட்சி, தென்னதிரை யன்குளத்தில், சீமைக்கருவேல மரங்களை அகற்றி பழ மரக்கன்று கள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கை யில், “புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்னதிரையன்குளத் தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், சீமைக் கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் பழ மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்கப் பட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப் பட்டு, பழ மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன்மூலம் குளத்தில் சேகரமாகும் நீர் வீணா காமல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வழி வகை ஏற்படும். மேலும் பழமரக்கன்றுகள் நடு வதன் மூலம் பொதுமக்கள் வசிக்கும் இடங்க ளில் உள்ள குரங்குகள் பழங்களை சாப்பிடு வதற்காக இங்கு வந்து வாழ துவங்கும். மேலும் இது குரங்குகளுக்கு வாழ்வளிக் கும் திட்டமாகவும் இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலை யில் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ள அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியை துவங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் குளங்கள், வாய்க்கால்கள், ஊரணிகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மேற் கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப் படும் இதுபோன்ற நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என்றார். வேளாண் இணை இயக்குநர் பெரிய சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) இளங்கோ தாயுமானவன், வட்டாட்சி யர் கவியரசன், ஊராட்சிமன்றத் தலைவர் ஆதீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.