திருவாரூர், மே 16-
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யம் காளியாகுடி தலைப்பு வாய்கால் மதகை சரிசெய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் ஒன்றியத் தலைவர் எம்.ராம மூர்த்தி தலைமையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். போராட்டத்தில் விவசாயிகள், ஊராட்சித் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தகவலறிந்து வந்த நன்னிலம் வட்டாட்சி யர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கே.தமிழ் செல்வி, ஒன்றியச் செயலாளர் தியாகு ரஜினிகாந்த் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மே 21- ஆம் தேதிக்கு முன்பாக காளியாகுடி தலைப்பு வாய்க்கால் மதகை சரி செய்வதாக அதி காரிகள் உறுதியளித்தனர்.