நாளை ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மறியல், ஆர்ப்பாட்டம்
திருவாரூர், அக்.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு அலுவல கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உரை யாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய - நகரச் செய லாளர்கள் கலந்து கொண்டனர். காவிரி படுகைப் பாதுகாப்பு கூட்டி யக்கத்தின் சார்பாக நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு முழு ஆதரவு அளிப்பது என்றும், வர்த்தகர்களை நேரில் சந்தித்து கடையடைப்புக்கு ஆதரவு கேட்பது, அக்.11 அன்று வட்டத் தலைநகரங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்ட ஆயத்த கூட்டம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் போராட்ட ஆயத்த கூட்டம் திருச்சியில் திங்களன்று நடந்தது. கூட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் அயிலை. சிவசூரியன் தலைமை வகித்தார். காவிரி படுகை மாவட்டங்களில் நடை பெற உள்ள கடையடைப்பு போராட்டம் குறித்து அக்.10 (செவ்வாய்) அன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரையும், மாலை மத்திய பேருந்து நிலைய பகுதி களில் பிரச்சாரம் செய்வது. அக்.11 அன்று காலை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மதிமுக மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, விடுதலை சிறுத்தை கள் கட்சி தமிழாதன், தமுமுக பிரதிநிதிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், புற நகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், ஜன நாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண் ணன், மாவட்டத் தலைவர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து கட்சிகள் ஆதரவு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சகாஜி தெருவில் காவிரி படுகை பாது காப்பு கூட்டியக்கம் சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்த ரம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அக்.11 அன்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் முழு வதும் கடையடைப்பு செய்து, காலை 9 மணிக்கு ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லோகநாதன், சிபிஐ மாவட்டச் செயலாளர் பாரதி, விசிக மாவட்டச் செய லாளர் முல்லைவளவன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் நிம்மதி, ஐயூஎம்எல் மாநிலச் செயலாளர் ஷாஜ கான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் இதயத்துல்லா, வாழ்வுரிமை கட்சி நிர்வாகி பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாபநாசம் இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளி யிட்டுள்ள அறிக்கையில், “அக்.11 அன்று காவிரி படுகை மாவட்டங்களில் நடைபெற வுள்ள முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் வெற்றியடைய மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவையும் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
பெரியார் சேவை மய்யம் குருதிக் கொடை வழங்கல்
பாபநாசம், அக்,9 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் சார்பில் சுய மரி யாதை சுடரொளி கணேசன் நினைவாக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கபிஸ்தலம் மணி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த முகாமை, கும்பகோணம் ரத்த தான டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஷேக் தாவூது, பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு பெரியார் சேவை மய்யத் தலைவர் குணசேகரன், கபிஸ்தலம் பெரியார் கல்வி சமூகப் பணி அறக் கட்டளை தலைமை அறங்காவலர் கலியமூர்த்தி, மணி மெட்ரிக்கு லேசன் பள்ளி தாளாளர் கலியமூர்த்தி, திராவிடர் சமுதாய நலகல்வி அறக்கட்டளை திருஞான சம்பந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 60 பேர் ரத்த தானம் செய்த னர்.
ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள் நிகழ்ச்சி
திருவாரூர், அக்.9 - திருவாரூர் மாவட்டம், விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்து உரை யாற்றினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் (இடைநிலைக் கல்வி), மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் இ.மணி மேகன், திருவாரூர் திரு.வி.க. கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.முல்லைநாதன் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி பெண்கள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர், அக்.9 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் ஒருங்கி ணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர்கள் 2 பணியிடமும், பல்நோக்கு பணியாளர் ஒரு பணியிட மும் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படை யில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதிவாய்ந்த பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இப்பதவிகளுக்கான மாதிரி விண்ணப்பத்தை திருவாரூர் மாவட்ட இணையதளத்தில் https:// tiruvarur.nic.in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைத்தளம், திருவாரூர் - 613 004 என்ற முகவரிக்கு, பதிவு தபாலில் 31.10.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
ஒரத்தநாடு காந்தி பூங்கா சீரமைக்கப்படுமா?
தஞ்சாவூர், அக்.9- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கிளைப் பேரவை அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுனந்தாசுரேஷ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் அருணாதேவி, சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளையின் புதிய தலைவராக அன்புச்செல்வன், செயலாளராக ஓ.ஆர்.வசந்தகுமார், பொருளாளராக கா.லெனின், துணைத் தலைவராக அ.கருணாநிதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள காந்தி பூங்காவை சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு கல்லூரியில் ரத்த தான முகாம்
அறந்தாங்கி, அக்.9 - புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின், யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல் வர் பேரா.வி.பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனை வர் கணேஷ்குமார் வரவேற் றார். யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பா ளர் முனைவர் கே.வெற்றி வேல் முகாமை துவக்கி வைத்தார். அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் செவிலி யர் குழுவினர், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் களிடமிருந்து பெறப்பட்ட 40 யூனிட் ரத்தத்தை அறந் தாங்கி அரசு மருத்துவ மனைக்கு வழங்கினர். ரத்த கொடையாளர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் காளிதாஸ் நன்றி கூறினார்.
ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்
திருநெல்வேலி, அக்.9- விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். மும்தாஜின் பெற்றோர் வீடு அம்பையில் உள்ளது. மும்தாஜின் பெற்றோர் சொத்தில் அவர் பங்கு கேட்டு அது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த சொத்தை பங்கு வைப்பது தொடர்பாக ஏற்கனவே மும் தாஜ் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகே யன் அங்குள்ள கூட்டரங்கில் மனு வாங்கிக் கொண்டி ருக்கும்போது வந்த மும்தாஜ் திடீரென ரிப்பனால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து ரிப்பனை பிடுங்கினர். ஆனாலும் அவர் கழுத்தில் சேலையால் இறுக்கி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி: ஆட்சியர்
பெரம்பலூர், அக்.9 - தமிழ்நாடு அரசு பட்டி யலினம் மற்றும் பழங்குடி யினர் பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத் யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனை வோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். இதில் பயன்பெற விண்ணப் பதாரர்களுக்கு கல்வித் தகுதி எதுவும் வரையறை செய்யப்படவில்லை. மேலும் புதிய தொழில் முனைவோராக இருக்கும்பட்சத்தில் வயது வரம்பு 18 முதல் 55 வரை இருக்க வேண்டும். தற்போது தொழில் செய்து கொண்டி ருப்போருக்கு வயது வரம்பு ஏதுமில்லை. மொத்த திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் 1.50 கோடிக்கு மிகாமல் முத லீட்டு மானியம் வழங்கப் படும். இத்திட்டத்தில் தவணை தவறாமல் கடனை திருப்பிச் செலுத்தும் தொழில் முனை வோர்களுக்கு கூடுதல் சலு கையாக 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனை வோர் www.msme tamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயி லாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சி யரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப் புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான் றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண் டும். மேலும் விவரங்களுக்கு 89255 33977, 89255 33978 என்ற தொலைபேசி அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் என்ற முகவரியை அணு கலாம் என மாவட்ட ஆட்சி யர் கற்பகம் தெரிவித்துள் ளார்.