districts

  தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு  

தஞ்சாவூர், ஆக.27-

      தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டக் குழு சார்பாக மாவட்டச் செயலாளர் எம்.ராம் தலை மையில், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகரனை நேரில் சந்தித்து, கண்டியூர் சங்க பயனாளிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

     தமிழகம் முழுவதும் மாநில மைய அறிவுறுத்தலின்படி, அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து, கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு அளிக்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகரனிடம் மனு  அளிக்கப்பட்டது.  

    கோவில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கும், குத்தகை விவசா யிகளுக்கும், சிறு வியாபாரம் செய்வோருக்கும் எதிராக, தமிழகம் முழு வதும் இந்துசமய அறநிலையத் துறையினர் எடுத்து வரும் நடவடிக்கை களைக் கைவிடக் கோரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என இந்த கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் நடத்தப்பட்டு  வருகிறது. மனு அளித்த போது சங்க நிர்வாகிகள், பயனாளிகள் உட னிருந்தனர்.