districts

img

நூறு நாள் வேலை சம்பளப் பாக்கியை வழங்குக!

தஞ்சாவூர், அக்.21-  நூறுநாள் வேலைத் திட்ட சம்பள பாக்கியை வழங்க வேண்டுமென வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் மாதர் சங்கம் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. மாதர் சங்க மாநிலச் செயலாளர்  எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் எஸ்.பாஸ்கர் ஆகியோர் தலைமையில், சிபிஎம் ஒன்றியக் குழு  உறுப்பினர் ராஜாங்கம், மனையேறிப் பட்டி கிளைச் செயலாளர்கள் முத்தையா, பாலமுருகன், வடுகன் புதுப் பட்டி கிளைச் செயலாளர் துரைராஜ் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சிக்கு உட் பட்ட கிராமங்களில் வறுமையிலும், சிர மத்திலும் வாழ்ந்து வரும் பொது மக்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை  உறுதி திட்டத்தின்கீழ் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த  சில மாதங்களாக ஊதியம் வழங்கப் படாமல் நிலுவையில் உள்ளது. நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை  உடனடியாக வழங்க வேண்டும்.  அதேபோல் மனையேறிப்பட்டி ஊராட்சியில், ஆதிதிராவிட மக்கள் குடி யிருக்கும் பகுதிகளில் உள்ள சுடுகாட்டு  பாதையில் மின்விளக்கு இல்லை. இங்கு மின்விளக்கு மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர  வேண்டும். பழுதடைந்த நீர் தேக்கத் தொட்டிகளை சீரமைத்து தர வேண்டும்.  இப்பகுதி மக்களின் அடிப்படை வசதி களை நிறைவேற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.