காஞ்சிபுரம், மார்ச் 5 - காஞ்சிபுரம் அருகே கீழ்சிறுணை பெருகல் கிராமத்திற்கு பேருந்து வசதி கேட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். காஞ்சிபுரம் அருகே திருப்புக்குழி கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சி யரை சந்தித்து மனு அளித்த னர். அதில், காஞ்சிபுரம் அரு கேயுள்ள கீழ்ச்சிறுணை பெருகல் கிராமத்தில் வசித்து வரும் எங்கள் கிராமத்தி லிருந்து பள்ளிக்கு செல்ல கடந்த 15 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை. அவதிப்பட்டு வருகிறோம். எனவே தினசரி 5 கி.மீ.தூரம் நடந்து பள்ளிக்கு சென்று வருகிறோம். வரும் கல்வி ஆண்டிலா வது பேருந்துகள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். மேலும் மூத்த குடிமக்கள் மருத்துவ வசதிக்காக செல்லும் நிலையை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரை செய்து செயல்படுத்த வேண்டும் என அந்த மனு வில் குறிப்பிட்டிருந்தனர்.