districts

img

புகையான், குலை நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி மனு

திருச்சிராப்பள்ளி, பிப்.13- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நட ராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் தமிழ்மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சக்திவேல் ஆட்சியரிடம் அளித்தனர்.  மனுவில், ‘‘திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் தாலுகா திருநெடுங்குளம், தேவராயநேரி, பத்தாளப்பேட்டை, அசூர், மாங்காவனம், வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப் பட்டு இன்னும் சில நாட்களில் அறு வடைக்கு தயாரான நிலையில், பருவம் தவறி பெய்த திடீர் மழையால் நெற் பயிர்களை புகையான் மற்றும் குலை நோய் தாக்கியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க  வேண்டும். பயிர்காப்பீடு செய்த விவசாயி களுக்கு காப்பீடு தொகையும், கூட்டுறவு உள்ளிட்ட விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். திருவெறும்பூர் பகுதி யை டெல்டா மாவட்டத்துடன் இணைத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. நிகழ்வில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், விவசாயிகள் ஜெயராமன், விஜயகுமார், விஸ்வநாதன், ரெங்கராஜ், நாகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.