districts

img

ஊராட்சி தலைவரை காணவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு

கும்பகோணம், டிச.30- கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி யில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் ஊராட்சி மன்ற தலைவரை காண வில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி மன்ற ஊழியர்களி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஏரகரம் ஊராட்சி பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை, குடிதண்ணீர் பிடிப்பதற்கு தெரு பம்பை காணவில்லை, வாய்க்காலை காணவில்லை, வாய்க் காலை கண்டுபிடித்து தூர்வாரி  தர வேண்டும், 100 நாள் வேலையை மீண்டும் புதுப்பித்து தரவேண்டும்,  ஏரகரம் பகுதியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீட்டிற்கு ஒரு குப்பைத் தொட்டி மற்றும் கழிப்பறை கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு ஊராட்சி மன்ற அலுவலகம் ஊராட்சி பணியாளரிடம் வழங்கப்பட்டது. மனுவினை கிளை செயலாளர் தமிழ் இனியன் மற்றும் பொறுப்பாளர்கள் பிரகாஷ், பிரபாகரன், தினேஷ் குமார், சந்திர சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வழங்கினர்.  இதில் ஊராட்சி மன்றத் தலைவரை காணவில்லை என்று கோரிக்கை மனுவை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.