districts

img

நூறுநாள் வேலை நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி மனு

கரூர், அக்.3 - நூறு நாள் வேலையில், நான்கு மாதங் களாக நிலுவையில் உள்ள சம்ப ளத்தை வழங்கக் கோரி, கிராம சபைக் கூட்டங்களில் மனு அளிக்கப்பட்டது. நூறு நாள் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சம்ப ளம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள 4  மாத சம்பளத்தையும் உடனே வழங்க வேண்டும். பணிபுரியும் காலங்களில் விபத்து ஏற்பட்டால், தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும். பாதுகாப்பற்ற சூழ லில் தொழிலாளர்கள் வேலை செய்கி றார்களா என்பதை அலுவலர்கள் கண் காணிக்க வேண்டும். தொழிலாளர் களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்ப டுத்தித் தர வேண்டும். அனைவருக்கும் நூறு நாட்களும் பணி வழங்க வேண்டும்.  நூறுநாள் வேலையை 200 நாளாக உயர்த்திட வேண்டும்.  நாள் ஒன்றுக்கு சட்டக்கூலி ரூ.600 வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத் தில் திங்கட்கிழமை நடைபெற்ற கிராம  சபைக் கூட்டங்களில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப் பட்டன. தோகைமலை தோகைமலை ஒன்றியத்திற்குட் பட்ட கிராம சபை கூட்டத்தில், 6 ஊராட்சி கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப் பட்டது. நாகனூர் ஊராட்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், பொருந்தளூர் ஊராட்சியில் சிபிஎம் தோகைமலை ஒன்றியச் செயலாளர் ஏ.சுப்பிரமணியன், விதொச ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.பெரியசாமி, நாக னூர் ஊராட்சியில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முனியப்பன், கொசூர் ஊராட்சியில் ஒன்றியச் செய லாளர் ஆர்.சங்கபிள்ளை ஆகியோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். குளித்தலை ஒன்றியத்தில் விதொச ஒன்றியச் செயலாளர் மு.க.சிவா கோரிக்கை மனுவை வழங்கினார். இனுங்கூர் கூட்டத்தில் ஒன்றியக் குழு  உறுப்பினர் சுப்பிரமணியன் கலந்து  கொண்டார். அரவக்குறிச்சி ஒன்றியம்  தெத்துப்பட்டி கூட்டத்தில், விதொச  ஒன்றியக்குழு உறுப்பினர் முருகே சன், வேலம்பாடியில் சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.