districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஸ்மார்ட் மீட்டர்: ஒன்றிய அரசை  கண்டித்து மனு

அரியலூர், நவ.25- மாநிலம் முழுவதும் 2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் என்ற மின் மீட்டர் பொறுத்த வேண்டும் என்று மாநில அரசை வலி யுறுத்தும் ஒன்றிய அரசை  கண்டித்து, அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் உதவி செயற் பொறியாளர் அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யச் செயலாளர் புனிதன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்ட னர்.

தெரு நாய்களால் தொல்லை

பாபநாசம், நவ.25 - கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக் கியமான நெடுஞ்சாலை களுள் ஒன்று. இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் தெரு நாய்கள் ஒன்றோ டொன்று சண்டையிட்டுக் கொள்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதோடு, சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு  ஏற்படுத்தும் கால்நடை களின் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க  வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மாடுகள் பறிமுதல் 

தஞ்சாவூர், நவ.25-  தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணி கடைவீதி, ரயில் நிலையம், பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலை யம், ஆவணம் சாலை, முதன்மைச் சாலை, அரசு  மருத்துவமனை என பொது இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக வும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையி லும், பராமரிப்பின்றி சாலையில் சுற்றித் திரிந்த  22 மாடுகள், 9 கன்றுகள் என மொத்தம் 31 கால் நடைகளை பேரூராட்சி  துப்புரவுப் பணியாளர் கள் பிடித்து, பேரூராட் சிக்கு சொந்தமான பொது  இடத்தில் அடைத்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர் களுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மாடு, கன்றுகள் திரும்ப ஒப்ப டைக்கப்பட்டன. 

பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு

ஆலங்குடி, நவ.25 - புதுக்கோட்டை மாவட் டம், கறம்பக்குடி அருகே  பாம்பு கடித்து சிகிச்சை  பெற்றுவந்த அரசுப் பள்ளி மாணவி சனிக் கிழமை உயிரிழந்தார். கறம்பக்குடி அருகே யுள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் மகள் சந்தியா (15). மோலுடையான்பட்டி அரசுப் பள்ளியில் 10 ஆம்  வகுப்பு பயின்று வந்த  சந்தியாவை நவ.18 அன்று  பாம்பு கடித்துள்ளது. தொடர்ந்து, தஞ்சாவூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தியா சிகிச்சை பல னளிக்காமல் சனிக் கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மழையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

சாலைப் பணி துவக்கம்

தஞ்சாவூர், நவ.25 -  தமிழ்நாடு முதல மைச்சர் கிராமச் சாலை  திட்டத்தின் கீழ், பேராவூரணி  சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர் ஊராட் சியில், பள்ளத்தூர் ஆதி திராவிடர் தெரு சாலை  ரூ.17.70 லட்சம் மதிப்பீட்டி லும், கட்டயங்காடு உக்கடை  ஊராட்சியில், நடுவிக்குறிச்சி ஆதிதிராவிடர் தெரு சாலை ரூ.24.37 லட்சத்திலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சனிக்கிழமை பணி துவக்கி வைக்கப்பட்டது.  பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து சாலைப்பணியை துவக்கி வைத்தார். சேது பாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளரும், சேது பாவாசத்திரம் ஒன்றிய பெருந் தலைவருமான மு.கி.முத்து மாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுவாதி காமராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தோழர் டி.விஸ்வநாதன் அகால மரணம்

திருவாரூர், நவ.25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றியக் குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான டி.விஸ்வநாதன் வியாழக்கிழமை அகால மரணமடைந்தார். மறைந்த தோழர் விசுவநாதன் உடல் அறையூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வெள்ளிக்கிழமை மாலை நடந்த இறுதி நிகழ்ச்சியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.இராதா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.சுப்பிரமணியன், கே.எஸ்.செந்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் ஆர்.மோகன் மற்றும் அனைத்து கட்சியினர், ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாநில கல்விக் கொள்கையை விரைவில் வெளியிடுக! அறிவியல் இயக்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, நவ.25 - தமிழ்நாடு அரசு மாநில கல்விக் கொள் கையை விரைவில் வெளியிட வேண்டுமென  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக் கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து தலைமை யில் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முத்துக் குமார் வேலை அறிக்கையை முன்வைத்தார்.  மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மண வாளன், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் க.சதாசிவம் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். புதுக்கோட்டையில் புதிதாக அரசு சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக பாலித்தீன்  பைகள் பயன்பாட்டைக் குறைத்து, காகிதப் பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண் டும். தமிழ்நாடு அரசு மாநில கல்விக் கொள் கையை விரைந்து வெளியிட வேண்டும்.  மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறை வேற்ற வேண்டும். சென்னையிலிருந்து செங்கோட்டை வரை புதுக்கோட்டை வழியாக  வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் செல்லும்  சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, தினந்தோறும்  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டிசம்பர் 30 அன்று மாவட்ட மாநாட்டை நடத்துவது, மாவட்டம் முழுவதும் அறி வியல் பிரச்சாரப் பணிகளை தீவிரமாக  மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட் டது. முன்னதாக மாவட்ட இணைச் செயலா ளர் க.ஜெயராமன் வரவேற்க, நிறைவாக இணைச் செயலாளர் பிச்சைமுத்து நன்றி கூறி னார்.

உவர்நீரில் கொடுவா மீன் வளர்க்க மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தஞ்சாவூர், நவ.25 -  பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கொடுவா மீன் உற்பத்தியை அதிகரிக்க வும், புதிதாக கொடுவா மீன்குளங்கள் அமைத்திட விரும்பு வோர் பயன்பெறும் வகையில், புதிய மீன்குளங்கள் அமைக்கவும், அதற்கான உள்ளீட்டு செலவீனங்களுக்கு மானியம் வழங்கிடும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் புதிய மீன்குளம் ஒரு ஹெக்டேர் அளவில் அமைத்திட செலவினம் ரூ.8 லட்சம் எனவும், உள்ளீட்டு செலவீனம் ரூ.6 லட்சம் எனவும் நிர்ணயித்து, அதனில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.5.60 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதேபோன்று உயிர்  கூழ்மதிரள் (பயோ பிளாக்) குளங்களில் இறால் வளர்த்தல்  மற்றும் உள்ளீட்டு செலவினங்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்திற்கு மகளிர் பிரிவின் கீழ் 60 சதவீதம் மானியம் 3 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி ஒரு அலகிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.18  லட்சத்தில் பெண்களுக்கு 60 சதவீத மானியமாக ரூ.10.80 லட்சம் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி மீன்வள  மேம்பாட்டு திட்டம் 2021-22-ன்கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவீனங்களுக்கான மானியம் பொதுப்பிரிவிற்கு 6 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.  இத்திட்டத்தின்கீழ் புதிய இறால் வளர்ப்பு குளம் அமைப்பதற்கும் மற்றும் உள்ளீட்டு செலவீனத்திற்கான மொத்த செலவினம் ரூ.14 லட்சத்தில் 40 சதவீதம் மானிய மாக ரூ.5.60 லட்சம் வழங்கப்படும். மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னு ரிமை அளித்து தேர்வு செய்யப்படும். விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள், மீன்வளம் மற்றும்  மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.873/ 4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது 04362-235389 என்ற  தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, 20.12.2023-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலை 
ஜனநாயக முறைப்படி நடத்த வலியுறுத்தல் 

தஞ்சாவூர், நவ.25 - மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு  மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் மணி கண்டனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.  சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், சிஐடியு கவுரவத் தலைவருமான ஆர்.மனோகரன், சிபிஎம் சேது பாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.வேலுச்சாமி ஆகி யோர் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில், “சேது பாவாசத்திரம் ஒன்றியம் உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்ட கடற்கரைகளில், படகுகள் வந்து, செல்ல ஏதுவாக, முகத்துவாரங்களை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும். தகுதி யான மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பி னர்கள் சேர்க்கை அனுமதி வழங்க வேண்டும். மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடந்த  வேண்டும். விடுபட்ட தகுதியான மீனவர்களுக்கு தடைக்கால  நிவாரணம் வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. அப்போது மீன் பிடித் தொழிலாளர் சங்க முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் குத்புதீன், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் தயார் சுல்தான், சகாபுதீன், சம்பைப்பட்டி னம் அப்துல் காதர் மற்றும் மீனவர்கள், மீன்பிடித் தொழி லாளர்கள் உடனிருந்தனர்.