அரியலூர், ஜூலை 1- திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரி தமிழ் நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலை ஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நடன கலைஞர்கள் எம்.ஜி.ஆர், விஜயகாந்த், அம்மன் வேடமிட்டு வந்து, திருவிழா காலங்க ளில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சி யர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் நடன கலை ஞர்கள் மனு அளித்தனர். அம்மனுவில், அரியலூர் மாவட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட திரைப்பட மேடை நடன கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் மேடை நடன கலை நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கக் கூடிய வரு மானத்தை கொண்டு தங்களது வாழ்வாதா ரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இவ்வகையான மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப் பட்டு வருவதால், இவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி, மேடை நடன நிகழ்ச்சிகளை நடத்தி வரு கிறோம். எங்களது நிகழ்ச்சியில் ஆபாசமோ, சாதி - இன மோதல்களை தூண்டும் வகையில் நடனமோ, எந்த ஒரு சமூக மக்களையும் இழிவு படுத்துவது, ஒரு சாரார் சமூக மக்களை தூக்கிப் பிடிப்பது போன்றவற்றை கடைப் பிடிப்பதில்லை. எனவே எங்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் வகையில், திரு விழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என கோரி யிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், காவல் துறையுடன் பேசி உரிய நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.