பாபநாசம், ஜூன் 8 - பெரியார் நகர்வு புத்தக சந்தை விற்பனை தொடக்க விழா பாபநாசத்தில் நடந்தது. பாபநாசம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த விழாவிற்கு தி.க பாபநாசம் ஒன்றியத் தலைவர் பூவானந்தம் தலைமை வகித்தார். பாபநாசம் நகரச் செயலாளர் வீரமணி வரவேற்றார். மாவட்டத் தலைவர் நிம்மதி, மாவட்டச் செயலாளர் துரைராஜ், மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், ஒன்றியச் செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் புத்தக விற்பனையை தொடங்கி வைத்துப் பேசினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) உறவழகன், திமுக தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நாசர், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.