பெரம்பலூர், மார்ச் 22 - மக்களவைத் தேர்தல் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு போட்டியிடுகிறார். வேட்பாளர் அருண் நேரு, வெள்ளிக்கிழமை பெரம் பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகத்திடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப் போது பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், தொட் டியம் தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், திமுக பெரம்பலூர் மாவட் டச் செயலாளர் ஜெகதீசன், மதிமுக மாவட்டச் செயலா ளர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவல கத்திற்கு வந்த வேட்பாளர் அருண் நேருவிற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ் தலைமை யில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.