districts

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

கும்பகோணம், ஏப்.19-

  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சரஸ்வதி பாட சாலை பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ஏப்ரல்  21அன்று காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெற உள்ளது.  

  இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வதால், கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச்  சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது  குறைகளை தெரிவித்து பயனடையலாம் என கும்ப கோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தெரிவித்துள்ளார்.