districts

மக்கள் பிரச்சனைகளை தீர்க்கப் போராடும் சிபிஎம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் பிரச்சாரம்

கும்பகோணம், பிப்.15 - தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளராக 34 ஆவது வார்டில் ஆ.செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் அந்த வார்டுக் குட்பட்ட மிஷின் தெரு, பேக்டரி தெரு,  ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் மக்களை சந்தித்து வாக்குச் சேகரிப் பில் ஈடுபட்டார். அப்போது சம்பத் பேசுகையில், “மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுத் தர, போராட்டக் களத்தில் மக்களோடு மக்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது. கும்ப கோணம் மாநகராட்சி தேர்தலில் 34  ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆ.செல்வத்திற்கு, அரி வாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத் தில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்யுங் கள்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், அருளரசன், கும்ப கோணம் நகர செயலாளர் செந்தில் குமார், கும்பகோணம் ஒன்றியச் செய லாளர் ஜேசுதாஸ், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனி வேல் மற்றும் நகரக் குழு உறுப்பி னர்கள் மாதர் சங்கத்தினர், திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர் கருணாநிதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருபுவனம்
திருபுவனம் பேரூராட்சி 8 ஆவது  வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்ர மணியனை ஆதரித்து, அப்பகுதியில் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் அரி வாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத் திற்கு வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பி னர் ஜீவபாரதி, ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் மற்றும் கூட்டணியினர் கலந்து கொண்டனர்.