districts

img

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியவர்கள் கைது: கண்டன ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், செப்.27- தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயி கள் பிரச்சனைகளுக்காக தஞ்சையில் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்ற, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்க  மாநில, மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  இதைக் கண்டித்து  விவசாயிகள் சங்கத் தின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில்  கரியாப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்ரமணியன் மற்றும் வேணு தலைமை வகித்தனர். ஒன்றியச் செய லாளர் வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். தாணிக்கோட்டகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றியச் செயலா ளர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சையில் செவ்வாய்க்கிழமை மாலை மாநகர குழு உறுப்பினர் சி.ராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்  குழு, மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல்  துரை.ஏசுராஜா, நகரச் செயலாளர், வசந்த குமார், சிஐடியு ஐயப்பன், விவசாயிகள் சங்கம் மோகன்தாஸ், விவசாயத் தொழிலா ளர் சங்கம் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவோணம் ஒன்றியம்  ஊரணிபுரத்திலும் போராட்டம் நடைபெற்றது.  கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.