districts

img

ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி

பாபநாசம், பிப்.4 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அருகே மாத ளம்பேட்டை ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை கடந்துதான் தனியார் மகளிர் கல்லூரி, சாக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல முடியும். இந்த ரயில்வே  கேட் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிற்கும் போதெல்லாம், கேட் எப்போது திறக்கும் என்று வாகனங்கள் மணிக்கணக் கில் காத்து நிற்கின்றன. இதனால் நடந்து செல்பவர்கள், சைக் கிளில் செல்லும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் ரயிலின்  இடுக்குகள் வழியே நுழைந்து அப்பகுதியை கடக்கின்றனர்.  ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாட்டைச் செய்ய  வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.