தஞ்சாவூர், ஜூலை 2-
பொதுமக்களின் குறைகளை உடனுக் குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு, கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங் கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜூலை 4 (செவ்வாய்க் கிழமை) அன்று தஞ்சா வூர் மாவட்டம், ஒரத்த நாடு வட்டம், தொண்டராம் பட்டு சரகம், கண்ணுக் குடி மேற்கு கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகா மில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது கோ ரிக்கை தொடர்பான மனுக் களை அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.