அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில், சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி தனக்கு மடக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததை தொடர்ந்து, கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில் ரூ.5,910 மதிப்புடைய மடக்கு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.