districts

img

மின்தகன மேடையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படும் மக்கள்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 30-

      திருச்சிராப்பள்ளி கருமண்டபத்தில் குடி யிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மின் மயானத்தில் இருந்து வெளியேறும் புகையால் குடியிருப்பு மக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர்.

   மின்தகன மையத்தைச் சுற்றி விஸ்வாஸ் நகர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கடந்த ஒரு வருடமாக தகனமையத்திலிருந்து வெளியேறும் புகை யைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இந்தத் தகன மையம் கடந்த  209-ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. தினமும் குறைந்தது ஐந்து உடல்கள் தகனம்  செய்யப்படுகின்றன.

     தகன மையத்திலிருந்து புகை மற்றும் மெல்லிய சாம்பல் அப்பகுதியைச் சூழ்ந்துள்  ளது. உடலை எரியூட்டும்போது அடர்த்தி யான கரும்புகை வெளியேறுகிறது.

    இது குறித்து விஸ்வாஸ் நகரில் வசிக்கும்  எஸ்.குமரேசன் கூறுகையில், உடல்கள் தக னம் செய்யப்பட்ட பிறகு சுமார் ஒரு மணி  நேரம் தகன அறையிலிருந்து துர்நாற்றம் வீசு கிறது. நாங்கள் ஒரு வருடமாக இப்பிரச்ச னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகி றோம். புகையை நீண்ட நேரம் சுவாசிப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றார்.

    குடியிருப்புவாசிகள் கூறுகையில், மாசுக்கட்டுப்பாட்டுப் சாதனம் வளிமண்ட லத்தில் நச்சுப் புகையை வெளியேற்று கிறது. 20 மீட்டர் உயரமுள்ள புகைபோக்கி யிலிருந்து வீடுகளுக்குள் வரும் புகையை நிறுத்த வேண்டும். புகையில் பெரும்பகுதி கட்டிடத்தில் உள்ள துளைகள் வழியாக வெளியேறுகிறது. இது காற்று மாசு பாட்டிற்கு வழிவகுக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பல னில்லை என்கின்றனர்.

    ஒரு மூத்த மாநகராட்சி அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது, பெரும்பாலான இயந்திரங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பழமையானவை என்பதால், பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை. பிரச்சனையை தீர்ப்பதற்கான பணிகள் நடைபெற்றுவது. புகைபோக்கி உள்ளிட்டவற்றை சீரமைப்ப தற்காக டெண்டர் தயாரிப்புப் பணி நடந்து வரு கிறது. ஒரு மாதத்துக்குள் பிரச்சனை தீர்க் கப்படும் என்றார்.