புதுக்கோட்டை, ஆக.21-
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 282 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிட மிருந்து வரப்பெற்றன. கூட்டத்துக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம் சார்பில் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத் துக்கு வரப்பெற்ற இணை மானியத் தொகையிலிருந்து தையல் இயந்திரம் வாங்குவதற்கான காசோலைகளை வழங்கினார்.