திருச்சிராப்பள்ளி, ஜூலை 31-
பென்சன் மாற்றம் (பென்சன் ரிவிசன்) செய்து உடனே வழங்க வேண்டும், பே கமிஷன்லில் இருந்து பிரித்து பென்சன் மாற்றம் செய்ய வேண்டும். முடக்கப்பட்ட 18 மாத பஞ்சப் படியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டி.ஓ.டி ஓய்வூதியர் சங்கம், பி.டி.பி.ஏ.ஐ மற்றும் எஸ்.என்.பி.டபிள்யூ.ஏ சங்கங்கள் சார்பில் திங்களன்று திருச்சி மண்டல தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலு வலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பி.டி.பி.ஏ.ஐ மாவட்டத் தலைவர் நம்பியார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர்கள் எஸ்.என்.பி.டபிள்யூ.ஏ. ஜானகிராமன், அகில இந்திய பிஎஸ்என்எல் டி.ஓ.டி ஓய்வூதியர் சங்க சின்னை யன், மாநில அமைப்பு செயலாளர் தேவராஜ் பி.டி.பி.ஏ.ஐ கமல் பாஷா, ஆகியோர் விளக்கிப் பேசினர்.
போராட்டத்தில் அனைத்து சங்க ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக எஸ்.என்.பி.டபிள்யூ.ஏ மாவட்டத் தலைவர் நம்பியார் வரவேற்றார். முடிவில் எஸ்.என்.பி.டபிள்யூ.ஏ மாநில உதவி செயலாளர் தமிழ் கொடி நன்றி கூறினார்.