districts

img

பட்டுக்கோட்டை தியாகிகள் நினைவிடத்தில் சிபிஎம் வீரவணக்கம்

பட்டுக்கோட்டை, மே.5 -  

    வர்க்கப் போரில் உயிர் நீத்த செங்கொடி இயக்க தியாகிகள் ஜாம்ப வானோடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகியோரின் 73-ஆவது நினைவு தினத்தை ஒட்டி, வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடியில் உள்ள தியாகி கள் ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

   நிகழ்ச்சிக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரெ.ஞானசூரி யன், முருக.சரவணன், தியாகி வாட்டாக் குடி இரணியன் சகோதரி மகனும், விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவரு மான மகாலிங்கம், கிளைச் செயலா ளர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன், பாண்டியன், மோகன், குலோத்துங்கன்,  தி.தனபால் மற்றும் எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் வாட்டாக்குடியில் அமைக்கப் பட்டுள்ள தியாகி இரணியன் நினை விடத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர், மூத்த தலைவர் ஆர்.சி. பழனிவேல், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.சக்திவேல் தலை மையில் சிபிஐ - சிபிஎம் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.

   இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றி யச் செயலாளர் எம்.அய்யநாதன், வாட்டாக்குடி ஊராட்சி மன்றத் தலை வர்கள் மெய்யநாதன் (வடக்கு), ராஜ சேகர் (தெற்கு), தியாகி வாட்டாக்குடி இரணியன் தம்பி மருமகள் குஞ்சம் மாள் மற்றும் தியாகி குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.