districts

img

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்: தமுஎகச மரியாதை

தஞ்சாவூர், அக்.8 -  பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாணசுந்தரம் நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக, பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாணசுந்தரம் நினைவு மண்டபத்தில், அன்னாரது உருவச்சிலைக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமுஎகச  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், மணிக்கூண்டு அருகே உள்ள பட்டுக்கோட்டையாரின் உருவச் சிலைக்கு என்.கந்தசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிளைத் தலைவர் முருக.சரவணன், செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை, பொருளாளர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.