மயிலாடுதுறை, ஜன.22- மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகேயுள்ள மாமாகுடி ஊராட்சி அப்பராசப்புத்தூர் மக்களுக்கு பட்டா- அடிப்படை வசதிகளை செய்து கொடுக் காததைக் கண்டித்து நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெ ரும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. அப்பராசப்புத்தூர் கிராமத்தில் பல தலைமுறையாக வசித்து வந்த மக்களுக் காக மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றன. இதன்பின்னரே குடிமனை இடங் களுக்கு அரசு அதிகாரிகள் மாற்று இடம் தருவதாக உறுதியளித்து இட மும் அளித்து நான்கு வழிச்சாலைக்காக எடுத்துக்கொண்ட நிலையிலும் வீடு களை இழந்த 40 க்கும் மேற்பட்ட குடும் பங்களுக்கு உரிய இடத்தை பகிர்ந்த ளிக்கவில்லை. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சாலை,மின்வசதி,குடிநீர் என எந்தவித அடிப்படை வசதிகளை யும் இதுவரை செய்யாமல் வரு வாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை ஏமாற்றி வருவதால் கிராமமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதேப்போன்று தலைச்சங்காடு கிராமத்தில் நான்கு வழிச்சாலையால் வீடு இழந்து சாலையில் வாழ்ந்து வரும் 13 குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீடும், மாற்று இடமும் வழங்கா மல் அதிகாரிகள் அலட்சியப்படுத்து கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிகாரி களிடம் நேரில் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லாததால் புத னன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு கட்சி யின் செம்பனார்கோவில் ஒன்றிய செய லாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின்,மாவட்டக்குழு உறுப்பி னர்கள் டி. கண்ணகி, வீ.எம்.சரவ ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவசுப்ரமணியன்,சபீர் அஹமது, தெட்சிணாமூர்த்தி, கபிலன், தோட்டம் ஜோதி,எம்.எஸ்.ராஜேந்திரன், லெனின் ராஜ் ஆகியோர் உரையாற்றினர். கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பி னர்கள், அப்பராசப்புத்தூர், தலைச்சங் காடு,மாமாக்குடி கிராமங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பாதிக்கப் பட்ட மக்கள் பங்கேற்றனர். மாமாகுடி ஊராட்சி, அப்பராசப்புத்தூர் கிராம மக்களுக்கு போராட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிமனை மற்றும் வீடு களுக்கு வீட்டு வரி ரசீது உடனடியாக வழங்க வேண்டும். வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்தையடுத்து காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிப்ரவரி முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக முடிவை எடுப்பது என எழுத்துப்பூர்வ மாக உறுதியளித்தனர்.இதனால் தற்கா லிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.