அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நாகப்பட்டினம், செப்.20 - நாகப்பட்டினம் துறை முகப் பகுதியில் பயணியர் போக்குவரத்து தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு தலை மையில் ஆய்வு செய்யப் பட்டது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி கலந்து கொண்டார். நாகப்பட்டினம் துறை முகத்திலிருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங் கேசன் துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையில், விரைவு பயணி யர் கப்பல் இயக்குவ தற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரி யம், ஒன்றிய அரசின் துறை முகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியு றவுத் துறை மூலம் மேற் கொள்ளப்படுகின்றன. மேலும், நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வா ருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளும் மேற்கொள்ளப் படுகிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. நாகப்பட்டினம் துறை முகத்திலிருந்து கப்பல் இயக்குவதற்கு நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறது. மேலும் இந்த பய ணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்ப தால் ஒன்றிய அரசின் தொழில் துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறை முகத்தில் அனைத்து வசதி களும் ஏற்படுத்தப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அர சுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்க ஒன்றிய அரசு உத் தேசித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழர் களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணி கம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவை களுக்கு மிகவும் பயனுள்ள தாக அமைவதுடன், தமிழ் நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள், முக்கியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டப் பகுதிகள், கலாச் சார பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டிலுள்ள சுங்கத்துறை, வெளியுறவு துறை, குடி மைத்துறை, கப்பல் பேரி யக்கத் துறை, இந்திய கப்பல் போக்குவரத்துக் கழ கம் ஆகியோர், தமிழர்கள் வசிக்கும் வட இலங்கை துறைமுகமான காங்கேசன் துறைமுகத்துக்கு, வர லாற்றுச் சிறப்புமிக்க பய ணிகள் கப்பல் போக்கு வரத்தினை துவக்க அனைத்து ஒத்துழைப்பினை யும் வழங்க வேண்டுமென அமைச்சர் எ.வ.வேலு தெரி வித்தார். இந்நிகழ்வில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், துறைமுக அதிகாரிகள், கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.