districts

img

தைவான் மென்பந்து போட்டியில் பங்கேற்பு திருச்சி மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 21-

    திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம்  வகுப்பு படிக்கும் மாணவி கள், கே.கே.நகர் பகுதியை  சேர்ந்த எஸ்.ஜெனீபர் மற்  றும் ஜி.எம்.காமினி. இவர்கள் மென்பந்து (சாப்ட் பால்) விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் தேசிய அள விலான பல்வேறு போட்டி களில் பங்கேற்று சிறப்பாக விளையாடி பரிசுகள் பெற் றுள்ளனர். இவர்களுக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்  சரவணன் பயிற்சி அளித் தார்.  

    இந்நிலையில் தைவான்  நாட்டின் தைபே நகரில் நடை பெறும் ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய அணி சார்பில் விளையாடும் 15  வயதிற்குட்பட்ட வீராங்க னைகள் தேர்வு, கடந்த ஏப்ரல்  மாத இறுதியில் நடைபெற் றது. ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடந்த தேர் வில் 16 பேர் கொண்ட இந்  திய அணியில், தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப் பட்ட 2 பேர் எஸ்.ஜெனீபர், ஜி.எம்.காமினி என்பது குறிப்பிடத்தக்கது.  

    இந்திய அணிக்கு மென்பந்து விளையாட்டு சிறப்பு பயிற்சியாளரான மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பிரசன்னா குமார் சிறப்பு பயிற்சி அளித்தார். தைவான் நாட்டில் ஜூன் 13 முதல் 17 வரை நடை பெற்ற போட்டியில் எஸ்.ஜெனீபர், ஜி.எம்.காமினி பங்கேற்றனர். போட்டிகளை முடித்து, ஜூன் 20 அன்று  இரவு திருச்சி ரயில் நிலை யத்திற்கு வந்தனர். அவர்  களுக்கு பெற்றோர்கள், நண் பர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.  

    அப்போது மாணவிகள் கூறுகையில், நாங்கள் குறு கிய காலத்தில் இந்த போட் டிக்கு தேர்வு செய்யப்பட்டு, தைவானில் நடந்த போட்டி யில் சிறப்பாக விளையாடி னோம். அடுத்து வரும் சர்வ தேச போட்டியில் கலந்து கொள்வதற்கு அரசு சார்பில்  உதவி செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மென்  பந்து (சாப்ட் பால்) போட்டி களை மாவட்ட, மாநில அள வில் நடத்திடவும், விளை யாட்டு உபகரணங்கள் மற் றும் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரவும் வேண்டும் என்றனர்.