சின்னாளப்பட்டி, பிப்.14- திண்டுக்கல் அருகே ஆ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் ஷீலா செல்வமேரி தம்பதியின் மகள் லென்சியா. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல் லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலை யில், பாரீசில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டேக்வாண்டோ போட்டியின் 65 கிலோ எடை பிரிவில் லென் சியா பங்கேற்று முதல் இடத்தை பிடித்ததுடன் தங்கப் பதக்கத்தையும் வென்று, பாரீசில் நடை பெறும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகினார். இதனையடுத்து ஊருக்கு திரும் பிய லென்சியாவுக்கு சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.