தஞ்சாவூர், ஆக.8-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம் - ஊடையக்காடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கபடி வீரர் ராக வன் நினைவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
போட்டிகளில் வென்ற அணிகளுக்கு மொத்தப் பரி சாக ரூ.3.15 லட்சம் வழங்கப் பட்டது. தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கு பெற்றன.
ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரி வில் 10 அணிகளும் பங்கு பெற்றதில் ஆண்களுக்கான பிரிவில் முதல்பரிசு ரூ.40 ஆயிரத்தை திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை இளைஞர் வானவில் அணி யினரும், இரண்டாவது பரிசு ரூ.30 ஆயிரத்தை தஞ்சாவூர் மாவட்டம் மாதுரான் புதுக் கோட்டை கண்ணதாசன் கபடி கழகம் அணியினரும், 3வது பரிசு ரூ.20 ஆயிரத்தை மயிலாடுதுறை மாவட்டம் சின்னகுடி நந்தீஷ் மெமோ ரியல் அணியினரும், 4வது பரிசு ரூ.10 ஆயிரத்தை புதுக் கோட்டை மாவட்டம் அரியா ணிப்பட்டி புதிய பறவை அணியினரும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.30 ஆயிரத்தை திரு வாரூர் மாவட்டம் கட்டக்குடி விளையாட்டு கழகமும், 2வது பரிசு ரூ.20 ஆயிரத்தை தமிழ்நாடு காவல்துறை சென்னை அணியினரும், 3வது பரிசு ரூ.15 ஆயிரத்தை மதுரை மாவட்டம் சித்தம் பட்டி சிபிஆர் அணியின ரும், 4வது பரிசு ரூ.12 ஆயி ரத்தை சென்னை எத்திராஜ் கல்லூரி அணியினரும் பெற் றனர்.
இப்போட்டியில், இந்திய கபடி வீரர் தர்மராஜ் சேரலா தன், முன்னாள் இந்திய ராணுவ கபடி பயிற்சியாள ரும், ப்ரோ கபடி பயிற்சியா ளருமான வைரவ சுந்தரம், அகில இந்திய ஜாய் பயிற்சி யாளர் விருது பெற்ற அனந்த கிருஷ்ணன், திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக தலை வர் நீலகண்டன், அகில இந் திய கபடி வீரர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்ட னர்.