districts

img

தேசிய ஸ்கேட்டிங் போட்டி பரணி பார்க் பள்ளி மாணவர் சாதனை

கரூர், ஏப்.20 -   எஸ்.ஜி.எப்.ஐ தேசிய ஸ்கேட்டிங்  போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று கரூர் பரணி பார்க் பள்ளி மாண வர் தேசிய சாதனை படைத்தார். மத்தியப்பிரதேசம் மாநிலம், சத்னாவில் இந்தியப் பள்ளிகள் விளை யாட்டு சம்மேளனம் எஸ்.ஜி.எப்.ஐ (SCHOOL GAMES FEDERATION OF INDIA - SGFI) சார்பாக 67 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன.  இதில் தனி நபர் ஸ்கேட்டிங் விளை யாட்டுப் போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாடிய கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர் ஜோயல் செங்குட்டுவன் வெள்ளிப் பதக்கம் வென்று தேசிய அளவில் தமிழகத்திற்கும் கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். தேசிய அளவில் சாதனை  படைத்த மாணவர் ஜோயல் செங்குட்டுவனுக்கு பள்ளி யில் பாராட்டு விழா நடைபெற் றது. விழாவில் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகன ரெங்கன், செயலர் பத்மாவதி மோகன ரெங்கன், அறங்காவலர் எம்.சுபா ஷினி, பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராம சுப்பிரமணியன் ஆகியோர் மாணவ ருக்கு நினைவு பரிசு வழங்கி பேசினர். பள்ளியின் முதல்வர் கே.சேகர், இரு பால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்  கலந்து கொண்டனர்.