districts

நாகாலாந்தில் அப்பாவி தொழிலாளர்கள் படுகொலை

பாபநாசம், டிச. 6 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் சட்டமன்ற உறுப்பின ருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டம், ஓடிங் பகுதியில் செயல்பட்டு வரும்  நிலக்கரி சுரங்கத்தில் பணி யாற்றும் ஊழியர்கள், பணியை முடித்துக்கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு வேனில் திரும்பிக் கொண்டி ருந்த போது அவர்களைத் தீவிரவாதிகள் என சந்தே கித்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அப்பாவி தொழிலாளர் அநியாயமாக கொல்லப் பட்ட இந்த துயரச் சம்பவம்  அப்பட்டமான மனித உரிமை  மீறலாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். ‘தீவிர வாதிகளை ஒடுக்குகிறோம்’ என்கிற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்  இந்த செயல் கடும் கண்ட னத்துக்குரியது.  இந்தியாவின் எல்லை யோர மாநிலங்களில் வாழும்  மக்கள், தனது உரிமைகளை மெல்ல மெல்ல இழந்து வரு வதும், அவர்களது உயிர்  அற்பமானதாக கருதப்படுவ தும் இந்த சம்பவத்தின்  வாயிலாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஒன்றிய அரசின்  கட்டுப்பாட்டிலுள்ள உள்துறை அமைச்சகம் இந்நி கழ்விற்கு முழு பொறுப் பேற்று இதற்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.